தொழிலதிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு.. சீரழிந்த இளம் தலைமுறை..!!
Aranthangi youngster arrest by police due to Mafing photo
சென்னையில் உள்ள முகப்பேர் மேற்கு இ.பி சாலை பகுதியை சார்ந்தவர் வடிவேல் (வயது 44). இவர் தொழிலதிபராக இருந்து வரும் நிலையில், அங்குள்ள ஜெ.ஜெ. காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளார். இந்த புகாரில்,
முகநூலில் உள்ள எனது புகைப்படத்தை மர்ம ஆசாமி மார்பிங் செய்து, என்னை தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். மேலும், மாபிங் செய்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்யாமல் இருக்க நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டி வருகிறார்.
எனது வீட்டின் முகவரியை அறிந்துகொண்ட நபர், எனது வீட்டிற்க்கே வந்து 5 சவரன் நகையை மிரட்டி போன்று சென்றுள்ளார். இன்னும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். இவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பகுதியை சார்ந்த ஆல்வின் (வயது 20) என்ற வாலிபர் இந்த குற்றத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், காவல் துறையினரின் விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிப்ளமோ பயின்று வந்த ஆல்வினிற்கு, விலையுயர்ந்த இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆவலில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதற்கு பணம் இல்லாததால், இணையத்தின் மூலமாக வசதியான நபர்களை தேர்வு செய்து புகைப்படத்தை மாபிங் செய்து மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆல்வினிடம் இருந்த நகையை மீட்ட காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Aranthangi youngster arrest by police due to Mafing photo