ரயிலில் ஊசலாடிய உயிர்.. திறந்து பார்க்கையில் பகீர்.! ரத்தம் சொட்ட, சொட்ட விபரீதம்.!
ANTHRA MEN SUICIDE ATTEMPT IN TRAIN BATHROOM
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜோலார்பேட்டை ரயில் கழிவறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கழுத்தறுக்கப்பட்ட ஒருவர் மீட்கப்பட்டு இருக்கின்றார்.
நேற்று இரவு 10 மணியளவில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஏலகிரி விரைவு ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த பொழுது பெட்டிகளை சுத்தப்படுத்த துப்புரவு தொழிலாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்பொழுது கழிவறையை சுத்தம் செய்ய பார்க்க சென்றபோது அங்கே அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதைப்பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் மூலம் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருடைய ஆதார் கார்டை எடுத்து பார்த்ததில் அவருடைய பெயர் ரவி என்பதும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் மது போதையில் இருந்ததால் தானே தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு எவரேனும் அவரை கழுத்தை அறுத்து விட்டு சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய ஆதார் கார்டை வைத்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் அனுப்பி இருக்கின்றனர்.
English Summary
ANTHRA MEN SUICIDE ATTEMPT IN TRAIN BATHROOM