சட்ட ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாடும் தமிழகத்தில் மேலும் ஒரு சம்பவம்!
Another incident in Tamil Nadu where the law and order problem is rampant
செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்யப்பட்ட தலைவர் சிலை!
இந்து மதத்தைப் பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கோவை முழுவதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர் வீடு மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது.
தமிழக உள்துறைச் செயலாளர், தலைமை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சட்டங்களும் பிரச்சனை பற்றி ஆலோசனை நடத்தினர். அதன் பின்பு தமிழ் முழுவதும் இது போன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கண்டமங்கலம் பகுதியில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் செருப்பு மாலை மற்றும் கரும்புள்ளி வைக்கப்பட்ட ஆ.ராசாவின் உருவப்படம் அண்ணா சிலையின் மீது மாட்டப்பட்டுள்ளது. மேலும் அண்ணாவின் சிலையையும் சேதப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செருப்பு மாலையையும் ஆராசாவின் புகைப்படத்தையும் அப்புறப்படுத்தி உள்ளனர்.
போலீஸ் தரப்பில் இருந்து அளிக்கப்பட்டு விளக்கமானது" சம்பவம் நள்ளிரவில் அரங்கேறி உள்ளதால் குற்றவாளிகள் யார் என்று தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்றத்தை தணிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
Another incident in Tamil Nadu where the law and order problem is rampant