குடும்பத்தினர் திட்டியதால் மனமுடந்து தற்கொலைக்கு முயன்ற நண்பர்களில் மேலும் ஒருவர் பலி..! - Seithipunal
Seithipunal


நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றிய இளைஞர்களை குடும்பத்தினர் திட்டியதால் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனலிக்காமல் மேலும் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

திருவாரூர் நிடாமங்கலத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் (26), அசோக்குமார் (26), ஆசை தம்பி. இவர்கள் மூவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இதில் ஆனந்த் மற்றும் அசோக்குமார் இருவரும் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தனர். 

இந்நிலையில், நண்பர்கள் மூவரும் அடிக்கடி வெளியில் சேர்ந்து சுற்றி வந்துள்ளனர். இதனைகவனித்த குடும்பத்தினர் மூவரையும் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர். 

இந்த தகவல் அறிந்து அவர்களை மீட்ட உறவினர்கள் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஆனந்த் கடந்த ஒன்றாம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் பெற்று வந்த ஆசை தம்பியும் உயிரிழந்தார். இதையடுத்து ஆசைதம்பியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another friend killed in suicide attempt in Thiruvarur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->