ஒரே மருத்துவமனையில் 5 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் மொத்தம் 23 ஆக உயர்வு!
another 5 patients in tamilnadu said minister vijayabaskar
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 23 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டும் புதியதாக 5 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் 4 பேர் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சேலம் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 22ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி விட்டார் ஒருவர் மரணமடைந்துவிட்டார்.
English Summary
another 5 patients in tamilnadu said minister vijayabaskar