திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்கள்.! காதலன் செய்த ஒரே செயல், தூக்கில் தொங்கிய காதலி.!
anna university student attemt suicide
தர்மபுரியை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகள் லோகேஸ்வரி (வயது 20). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். அவருடன் தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வரும் நிலையில். இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்த்தவர்கள் என்பதால் நட்பாக பழகிவந்தனர். இந்த நட்பானது நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த இருவரது பெற்றோரும் காதலை அவர்களின் காதலை ஏற்றுக்கொண்டதுடன், இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தமும் செய்தனர். கல்லூரி படிப்பை முடித்ததும்இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக இருவரது பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தனது தந்தை ஜெயவேலுக்கு அதிக கடன் இருந்ததால் லோகேஸ்வரி கடத்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதனால் கல்லுரியில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற்று படிப்பை தொடர முடிவு செய்த அவர், சம்பவத்தன்று தனது காதலனிடம் கல்வி உதவித்தொகை விண்ணப்ப மனு அளிப்பதற்காக கல்லூரியின் அலுவலகத்திற்கு வருமாறு காதலனை அழைத்துள்ளார். ஆனால் அவரது காதலன் அங்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தந்தையின் கடன் பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த லோகேஸ்வரிக்கு, தனது காதலன் தன்னுடன் வர மறுத்த காரணத்தால் லோகேஸ்வரி மனமுடைந்து போனார். இந்தநிலையில் நேற்று இரவு தான் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு சென்ற லோகேஸ்வரி அங்கு தன் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நவல்பட்டு போலீசார், லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
English Summary
anna university student attemt suicide