அணில் சேமியா முக்கிய புள்ளியிடம் பணம் கேட்டு மிரட்டும் பிரபல கட்சி... காவல்நிலையத்தில் புகார்மனு.!!
Anil semiya partner tread ttk party member
திண்டுக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது அணில் சேமியா. இந்த அணில் சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் ரவிச்சந்திரன், அங்குள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த புகாரில், கடந்த மாதம் எனது அலைபேசிக்கு ஒரு தொடர்பு வந்தது. மறு முனையில் பேசிய நபர் தன்னை தமிழ் நேசன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தமிழ் தேசிய கட்சி நிர்வாகி என்றும் கூறினார்.
இவர் தங்களின் நிறுவனத்தில் தரமற்ற முறையில் சேமியா தயார் செய்யப்படுகிறது என்றும், இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். விடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவே, மற்றொரு நிர்வாகியாக சிவகுமார் என்பவர் பேசினார். அவர் எனது அலைபேசிக்கு வாட்ஸ் அப் மூலமாக 5 வீடியோக்கள் மற்றும் 14 புகைப்படங்கள் அனுப்பி வைத்தார். அதை கண்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்த வாட்ஸ்அப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து விசாரித்தபோது, வேடசந்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வைத்து மோசடியாக வீடியோக்கள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறை சார்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Anil semiya partner tread ttk party member