அங்கொட லொக்காவின் அதிரி புதிரி சர்ச்சைகள்.. பதறிப்போகும் காவல்துறையினர்.!!
angoda lokka police investigation update
கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல குற்றச்சம்பவங்களை நிகழ்த்தி வந்த நிழல் உலக தாத்தா அங்கொட லொக்கா. இவர் ஸ்ரீலங்காவில் இருந்து கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக கோவையில் தஞ்சம் அடைந்த நிலையில், தனது பெயரினை பிரதீப் சிங் என்று பெயர் மாற்றியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழக்கவே, இவரது மரணத்தில் பல சந்தேகம் இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல் துறை அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதில் இலங்கையை சார்ந்த அங்கொட லொக்கா பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கிருந்து தப்பி வந்ததும், தனது உருவத்தை மாற்றி சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தனது முகத்தினை மாற்றும் வகையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும், முதலில் மூக்கு பின்னர் முகம் என்று அறுவை சிகிச்சை செய்து வெளிநாடுகளிலும் தப்பி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
angoda lokka police investigation update