2 மாத குழந்தை, 2 வயது குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை.. நிலத்தகராறில் பயங்கரம்.!
Andra Pradesh Visakhapatnam Land Issue Family Members 6 Person Ruthless Murder 15 April 2021
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஜுட்டாடா கிராமத்தை சார்ந்தவர் ராமராவ். இவர் நேற்று இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சார்ந்த அப்துல் ராவ் என்பவர், ராமராவின் வீட்டிற்கு நுழைந்துள்ளார்.
ராமராவின் வீட்டில் அவரது மனைவி உஷா, அவரது குடும்பத்தை சார்ந்த ரமா தேவி, அருணா, 2 வயது குழந்தை உதய், இரண்டு மாத பச்சிளம் குழந்தை ஊர்நிஷா ஆகிய ஆறு பேரும் இருந்த நிலையில், இவர்களை அப்துல் ராவ் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் 6 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அப்துல் ராவை கைது செய்து விசாரணை செய்கையில், இது நிலம் தொடர்பான தகராறில் நடந்துள்ளது என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Andra Pradesh Visakhapatnam Land Issue Family Members 6 Person Ruthless Murder 15 April 2021