தேர்தல் தோல்விக்குபின் அன்புமணியின் உருக்கமான பேச்சு!
anbumani press meet after his defeat
தேர்தல் தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, " எனக்கு வாக்களித்த தருமபுரி மக்களுக்கு நன்றி. கடந்த தேர்தலில் வாக்களித்து சேவை செய்திட வாய்ப்பு வழங்கிய தருமபுரி மக்களுக்கும் நன்றி.
மத்தியில் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் தொடர இருப்பதால் தருமபுரி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளான காவேரி உபரிநீர் திட்டம், சிப்காட் திட்டம், ரயில்வே திட்டம் முதலியவற்றை கொண்டுவர நிச்சயமாக அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பேன்.
அதேபோல 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட தொடர்ந்து வலியுறுத்துவோம். தருமபுரி தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவர் செந்தில்குமார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
anbumani press meet after his defeat