எங்க இருக்கீங்க தங்கமே.. சென்னை வாலிபரை காண ஆவலுடன் ஆனந்த் மகேந்திரா.! - Seithipunal
Seithipunal


ஆட்டோவிலேயே ஒரு லட்சம் ரூபாய் செலவில் வீடு தயாரித்துள்ள இளைஞரை மகேந்திரா நிறுவன தலைவர் பாராட்டியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்தியாவில் தொழில் அதிபராக இருந்து வரும் ஆனந்த் மகேந்திரா, கண்டுபிடிப்பு விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார். மேலும், அவ்வப்போது பல பரிசுகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், சென்னையில் உள்ள இளைஞர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் ஆட்டோவில் வீடு தயாரித்து இருக்கிறார். சென்னையை சேர்ந்த அருண் பாபு என்ற இளைஞர், கடந்த 2020 ஆம் வருடத்தில் ஆட்டோ ஒன்றை வாங்கி அதனை வீடாக மாற்றியுள்ளார். 

இந்த ஆட்டோவில் வீட்டில் இருப்பதைப் போலவே குளியலறை, கழிவறை, படுக்கையறை, சமையலறை என அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும், 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும் இருக்கிறது. வசதியுடன் தயாரிக்கப்பட்ட வீட்டினை தயாரிக்க மொத்தம் ஒரு லட்சம் செலவாகியது என்று அருண் பாபு தெரிவித்துள்ளார். 

இந்த வீடு தான், இந்திய நாட்டிலேயே முதல் சிறிய நடமாடும் வீடாகவும் இருக்கிறது. மேலும், அருண்குமாரை தொடர்பு கொள்ள ஆவலோடு இருப்பதாகவும் ஆனந்த் மகேந்திரா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anand Mahindra Congrats Chennai Youngster Making House on Auto


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->