கணவன் வேண்டாம்., அவன் தான் வேண்டும்.. ஆசை நாயகி விபரீத முடிவு.! புதுக்கோட்டையில் சோகம்.!
an women suicide for her illegal love
கள்ளக்காதலன் தன்னை விட்டு விலகிய காரணத்தால் 32 வயது பெண்மணி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(32)க்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், கணவருடன் ராஜேஸ்வரிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரைக்குடி பர்மா காலனி பகுதியில் குடியேறினர்.
அப்போது கே.வி.கோட்டை பகுதியியை சேர்ந்த பிரபுதேவா என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அவருடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்துள்ளார். சில நாட்களாக அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவரிடம் ராஜேஸ்வரி கேட்டுள்ளார்.
ஆனால், பிரவுதேவா மறுத்துவிட்டார். இதன் காரணமாக அப்பெண் தற்கொலை செய்வதாக வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை பிரபு தேவாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு, மின்விசிறியில் ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வீடியோவை கண்டா பிரபுதேவா அந்த வீட்டு உரிமையாளருக்கு போன் மூலம் தகவல் கொடுக்க அவர்கள் காவல்துறைனரூக்கு தகவல் கொடுத்தனர்.
English Summary
an women suicide for her illegal love