கருகிக்கிடந்த கட்டை.. அருகே சென்றதும் அதிர்ச்சி.! திருச்சி அருகே பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே காவிரி ஆற்று கரையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக ஓட்டல் நடத்தி வரும் பெண் ஒருவர் ஜூயபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருகி கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்த பெண் திருச்சி ஆமூர் பகுதியைச் சேர்ந்த கனகாம்புஜம் என்பது தெரியவந்துள்ளது. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள எஸ் ஆர் சி கல்லூரியில் கேன்டீன் சமையலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன. கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். 

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எரித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் தரப்பில், இது தற்கொலை போலத்தான் தெரிகிறது என்றும், மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An women dead body found near Trichy mukkompu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->