தந்தைக்கு கொரோனா., தவிக்கவிட்ட பிள்ளைகள்.! தன்னந்தனியே நின்றவருக்கு, தமிழக அரசு அரவணைப்பு., விபரீதத்தில் முடிந்த சோகம்.!
An old women suicide in madurai who affected by corona
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தையை பெற்ற பிள்ளைகளே கைவிட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த கருப்பசாமி (வயது 60) என்பவருக்கு கொரோமா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருடைய பிள்ளைகள் அவரை வீட்டை விட்டு வெளியேற வைத்துள்ளனர்.
மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையோரங்களில் பசியுடன் சுற்றித் திரிந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைக்க அவர்கள் விரைந்து வந்து கொரோனா பரிசோதனை செய்து அவருக்கு நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து அவரை மதுரை தனியார் கல்லூரி முகாமில் வைத்து, சிகிச்சை அளித்து வந்துள்ளனர். பெற்ற பிள்ளைகளே கைவிட்ட காரணத்தால் மிகுந்த சோகத்தில் இருந்த கருப்பசாமி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
An old women suicide in madurai who affected by corona