15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது.!
An old man arrested for sexually harassing a 15 year old girl in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போகோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குடி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜேந்திரன் (60). இவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
An old man arrested for sexually harassing a 15 year old girl in Ariyalur