கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எலக்ட்ரீசியன்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் முதுகரையை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஆகாஷ் (25). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டில் உள்ள குளியல் அறையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அப்பொழுது சந்தேகமடைந்த சிறுமியின் தாய் வீட்டின் குளியல் அறையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்த நிலையில், ஆகாஷை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் ஆகாஷ் சிறுமியின் தாயை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆகாஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An electrician sexually harassed a girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->