வாகனத்தில் செல்லும் பொழுது குறுக்கே வந்த மாடு!! பிரேக் அடித்த போது நேர்ந்த பரிதாபம்!!  - Seithipunal
Seithipunal


பெரியபாளையம் பேட்டை மேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தரணி என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மனைவியும், இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது.

இந்நிலையில் பெரிய பாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் தரணி சென்று கொண்டே இருந்துள்ளார். அப்போது பெரியபாளையம்-வெங்கல் சாலையில் கோட்டைமேடு கிராமம் சர்ச் அருகில் சென்ற போது திடீரென அந்த சாலையில் மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது.

இதனால் தரணி மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் அடித்து நிறுத்த முயன்றுள்ளார். இதனால் நிலை தடுமாறி தரணி சாலையில் மோட்டார் சைக்கிளோடு விழுந்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த தரணி பின்னர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An accident in periyapalayam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->