சசிகலாவின் எந்த திட்டத்திற்கும் அசரமாட்டோம்.. அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியென உறுதி செய்யப்பட்ட சசிகலா, சிறையில் இருந்து விடுதலையானதும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், கடந்த சில வாரமாகவே சசிகலா அதிமுக தொண்டர்களிடம் உரையாற்றுவது உறுதியானது. இதனால் 15 பேரை அதிமுக தலைமை நீக்கம் செய்தது. மேலும், பிற தொண்டர்களும் சசிகலாவுடன் பேசினால் பாரபட்சமின்றி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தது. 

இந்நிலையில், அதிமுக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அதிமுக தொண்டர் முத்தையா, " கொரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் டிக் டாக், மீம்ஸ் வெளியிட்டு வருவது போல சசிகலா நாடகம் நடத்தி வருகிறார். இந்த நாடகத்திற்கு அதிமுக தொண்டர்கள் அசரமாட்டோம். 

எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வேண்டும். சசிகலா வேண்டாம் என்ற விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் " என்று தெரிவித்தார். இதனைப்போன்று, அதிமுக நிர்வாகி முகமது யூசுப் தெரிவிக்கையில், " குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சசிகலா செயல்பட்டு வருகிறார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டிய ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் வழியில் கழகத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஒற்றுமையுடன் பாடுபடுவோம். சசிகலாவின் எந்த நாடகமும் எங்களிடம் பலிக்காது. அவரின் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் எங்களை ஒன்றும் செய்யாது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Supporters Talks about Sasikala 20 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->