அதிமுக வியூகமே தோல்விக்கு காரணம் - விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேச்சு.!
AIADMK OPanneerSelvam Speech about TN Assembly Election Loss at Viluppuram Party Meeting 3 Oct 2021
சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு, அதிமுகவின் சில வியூகமே காரணம் என ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில், அன்றைய ஆளும் கட்சியாக இருந்து வந்த அதிமுக தோல்வியை தழுவியது. இதனால் 10 வருடங்கள் கழித்து திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தது.
தற்போது விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 & 9 ஆம் தேதியில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், " மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவ சில வியூகமே காரணம். அதிமுக ஆட்சியின் மீது எந்த குறையும் இல்லை " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
AIADMK OPanneerSelvam Speech about TN Assembly Election Loss at Viluppuram Party Meeting 3 Oct 2021