#Breaking: உச்சக்கட்ட கண்டனம்.. கொந்தளித்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்..! பரபரப்பு அறிவிப்பு.!!
AIADMK OPanneerSelvam and Edappadi Palanisamy Condemn about Sathyam TV Attacked 3 Aug 2021
சத்யம் தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளாகிய விவகாரத்தில், அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்தில் பல்வேறு காட்சி ஊடகங்கள், செய்திச் சேனல்கள் இயங்கி வருகின்றன. மதம் சார்புடைய காட்சி ஊடகங்களும், மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளன.
அப்படிப்பட்ட ஊடகங்களில் ஒன்றான “சத்யம் தொலைக்காட்சி'' நிலையத்தை தனிநபர் ஒருவர் நேற்று (3.8.2021) கையில் ஆயுதங்களோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இச்செயலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இதுபோன்ற தாக்குதலைத் தடுக்க தற்போதைய திமுக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தொலைக்காட்சி நிலையத் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்புலத்தை ஆராய்ந்து, இனியும் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
AIADMK OPanneerSelvam and Edappadi Palanisamy Condemn about Sathyam TV Attacked 3 Aug 2021