எந்த மாசம் பிறந்தாலும் திமுகவிற்கு வழி கிடைக்காது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னை ராமாபுரத்தில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசுகையில், இன்னும் நான்கே மாதங்களில் நல்ல வழி பிறக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். இந்த வருடத்தில் தை மாதமும் பிறந்துவிட்டது. 

இன்னும் 4 மாதங்களில் அதற்கான வழியும் பிறக்கும். மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? " என்று பேசினார். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் உதயகுமார், திமுகவிற்கு எந்த மாதத்திலும் வழி பிறக்காது என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டியில், " ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்படும். 

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது உண்மைதான். ஆனால், திமுகவிற்கு தை மாதம் மட்டுமல்ல, மாசி, பங்குனி என எந்த எந்த மாதம் பிறந்தாலும் வழி பிறக்காது. எப்போதும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. ஸ்டாலினிற்கு எந்த மாதத்திலும், வருடத்திலும் வழி பிறக்காது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Minister RB Udhayakumar Pressmeet Madurai About DMK MK Stalin Dream


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->