ஒரத்தநாடு, நன்னிலம், போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

அ.தி.மு.க. - தி.மு.க. - 130 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - காங்.- 14 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - விடுதலை சிறுத்தை கட்சிகள் - 5 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - கொ.ம.தே.க. - 3 இடங்களில் நேரடியாகவும், அ.தி.மு.க. - முஸ்லிம் லீக் - 3 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி திமுக 159 இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், அதிமுக 75 இடங்களில் முன்னிலையில் வகித்து வருகிறது. இதனால் திமுக ஆட்சியை அமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், ஒரத்தநாடு தொகுதி அதிமுக வைத்தியலிங்கம் 28,931 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் காமராஜ் 4000 + வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Candidate Orathanadu Nannilam Polur Constituency Victory


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->