பத்து ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த மனைவி இறந்ததும், ஜரூராக கணவன் செய்த காரியம்….! இப்படியும் ஒரு கணவன்…! - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே உள்ள காலையூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 35). இவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். இவரது மனைவியின் பெயர் லட்சுமி (வயது 29).

இவர்களுக்கு திருமணமாகீ 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதற்காக, இந்த தம்பதியர் பார்க்காத வைத்தியம் இல்லை. போகாத கோயிலும் இல்லை.

ஆனாலும், குழந்தைப் பேறு இல்லாததால், மிகவும் வேதனையில் வாழ்ந்து வந்தனர். அக்கம் பக்கத்தினர், தெரிந்தவர்கள் எல்லாம், இன்னும் குழந்தை இல்லையா? என்று கேட்பதும், அவர்களது நெஞ்சில் ஈட்டியைச் சொருகியது போல் இருந்தது.

இதனால், லட்சுமி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார்.

பிறகு, வீட்டில் யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து, துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் லட்சுமி. இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார் அவரது கணவர் காந்தி.

லட்சுமியின் உடலைக் கண்டவராயன் போலீசார் கைப்பற்றி, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன் பின், அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.

பெண்டாட்டி செத்தா, புருசன் புது மாப்பிள்ளை, என்று சொல்வர்கள்.  ஆனால், அப்படி, காந்தி நினைக்கவில்லை. குழந்தை இல்லாமல் போனாலும், ஒருவருக்கு ஒருவர் குழந்தையாகத் தான் பாவித்து வாழ்ந்து வந்தனர்.

அந்த எண்ணமும், மனைவியின் இழப்பும் காந்தியை மிகவும் வாட்டியது. மனைவியை இழந்த சோகத்தில், அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after wife death, suddely husband done this


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->