நீட் தேர்வு எழுதிவிட்டு சென்ற மாணவி மரணம்.! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
after finishing neet exam student sudden dead
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதி தேர்வான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது
இந்த தேர்வை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பணம் கிராமத்தைச்சேர்ந்த முனியசாமி மகள் சந்தியா வயது17 மதுரையில் உள்ள தேர்வு மையத்தில் எழுதினார்
டாக்டர் கனவுடன் மாலையில் தந்தையுடன் அவர் வீட்டிற்கு புறப்பட்டார். மதுரையில் இருந்து அரசு பஸ்சில் சென்ற சந்தியா சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சென்ற போது திடீரென மயங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனியசாமி பயணிகள் உதவியுடன் மகளை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்
இதனை தொடர்ந்து சந்தியா மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தியா இறந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனால் நிலை குலைந்துபோன முனியசாமி கதறி அழுதார்.
மாணவி சந்தியாவின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையில் இது இயற்கைக்கு மாறான மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது
நீட் தேர்வு எழுதி விட்டு டாக்டர் கனவுடன் வீட்டுக்கு புறப்பட்ட மாணவி எதிர் பாராதவிதமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
English Summary
after finishing neet exam student sudden dead