#சற்றுமுன்: நேரம் குறித்த வைகோ.. ஆலோசனைக்கு பின்னர் பரபரப்பு பேட்டி.!
After DMK Alliance Party meeting Vaiko Press meet 21 September 2020
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாய சட்டத்திருத்த மசோதாவானது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்த மசோதாவினை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், வாக்கெடுப்பிற்கு பின்னர் அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் கூட்டணிக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் பிற விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில், மதிமுக நிறுவனர் மற்றும் தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " திமுக தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகள் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கி வருகிறது. மத்திய, மாநில அரசின் நடவடிக்கையை எதிர்த்து வரும் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் சாலைமறியல் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
After DMK Alliance Party meeting Vaiko Press meet 21 September 2020