காவல்நிலையம் அருகிலேயே கழுத்து அறுத்து கொல்லப்பட்ட வழக்கறிஞர்..!!
advocate murder before police station
போலீஸ் ஸ்டேஷன் அருகில் வழக்கறிஞர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தூத்துக்குடியை சேர்த்த வக்கீல் சிவகுமார் அவரது வயது 40. இவர் ஏற்கனவே பல வழக்கில் சிக்கியுள்ளார். இந்நிலையில், சென்ற 2005ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் ஆத்திபழம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் சிவக்குமார், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக சென்றபோது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸார் இச்சம்பவத்தை குறித்து தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்துக்கு அருகிலேயே கொலை செய்ய பட்டது அந்த பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,மக்களுக்கு போலீஸ் மீது உள்ள நம்பிக்கை சற்று நிலைகுலைந்து காணப்படுகிறது.
English Summary
advocate murder before police station