13 வயதில் சிறுமி 2 மாத கர்ப்பம் - வளர்ப்பு தந்தை கைது
adoptive father arrested for 13 year old girl 2 month pregnant in kovai
கோவை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் சிறுமியின் தாய் விமல்(35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்குச் செல்லும் நேரத்தில், வளர்ப்பு தந்தையான விமல், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் யாரிடமாவது இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, சிறுமையை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல் நலம் பாதிப்படையவே, சிறுமியின் தாய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது தனக்கு நேர்ந்த கொடுமை அனைத்தையும் சிறுமி தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி எழுத்தாள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலீசார் 13 வயது சிறுமியை கர்ப்பமாகிய வளர்ப்பு தந்தையை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
adoptive father arrested for 13 year old girl 2 month pregnant in kovai