அடுத்தடுத்து கொரோனா உறுதியாகும் அதிமுக எம்.எல்.ஏக்கள்.. கவலையில் எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது. 

அரசு மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து உதவி செய்து வரும் நிலையில், களத்தில் நின்று பணியாற்றிய பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதியானது. இன்று காலை கூட அதிமுக பரமக்குடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சதன் பிரபாகருக்கு கொரோனா உறுதியானது. 

இந்த நிலையில், தற்போது உளுர்ந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பலியான நிலையில், பல திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா உறுதியாகி வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் தமிழக முதல்வரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Ulunthurpet MLA Kumaraguru test positive corona


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->