நாங்கதாண்டா பெரியாளு.. அமைச்சர் முன்னிலையிலேயே லடாய்..!
ADMK Supporters two gang fight in front of Minister Sevur Ramachandran in Chengam
செங்கத்தில் அம்மா மினி க்ளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் முன்னிலையிலேயே அதிமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறக்க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருகை தந்திருந்தார். இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் ஆதரவாளர்களுக்கும், கண்ணாகுறுக்கை ஊராட்சி மன்ற துணை தலைவர் அன்னம்மாள் வேணுகோபால் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த தள்ளுமுள்ளு சிறிது நேரத்திற்குள்ளாகவே கைகலப்பாக மாறி நிலையில், தொடர்ந்து இரு தரப்பினரும் அமைச்சர் முன்னிலையில் சண்டையிட்டுள்ளனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இருவரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில், மேடைக்கு கீழே சென்ற இரு தரப்பும் மீண்டும் மோதிக் கொண்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
ADMK Supporters two gang fight in front of Minister Sevur Ramachandran in Chengam