கொரோனாவின் கோரப்பிடியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.. அதிர்ச்சியில் எடப்பாடி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு தேவையான உதவியை செய்ய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. 2,08,784 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 4,349 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். களப்பணியாற்றிய பலருக்கும் கொரோனா அடுத்தடுத்து உறுதியாகி வந்தது.

இந்நிலையில், பூம்புகார் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் பவுன்ராஜ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருவதாக தகவல் தெரிவிப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Poompuhar MLA PavulRaj corona positive


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->