திமுக விண்வெளிக்கு போயி பிரச்சாரம் செய்தாலும் பலன் இருக்காது - டோட்டல் டேமேஜ் செய்த அதிமுக அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மதுரையில் வைத்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சரிடம் நிவர் புயல் நிவாரணம் குறித்தும், அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், " நிவர் புயல் தமிழகத்தை தாக்கும் என்ற செய்தியை அறிந்ததும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இயற்கையை வெகு சிறப்பாக கையாண்டு சாதனை செய்துள்ளார். அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, நிவர் புயலால் ஏற்பட இருந்த பெரும் சேதமானது தவிர்க்கப்பட்டுள்ளது. 

நிவர் புயலுக்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுகவினர் விண்ணுக்கு சென்று பிரச்சாரம் செய்தாலும், அவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள். மதுரை மாநகரில் அமையவுள்ள ரூ.1450 கோடி மதிப்பீட்டிலான கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுவதற்கு டிசம்பர் 4 ஆம் தேதி மதுரைக்கு வருகிறார் " என்றும் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Minister RB Udhayakumar Pressmeet 29 November 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->