அதிமுகவின் முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய திமுக..!
ADMK Members joined DMK in Cuddalore
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
திமுக தலைமை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரத்திற்கு வந்திருந்த கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று (13.2.2020) கடலூர் கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கடலூர் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.மல்லிகா வைத்திலிங்கம் தலைமையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒன்றிய முன்னாள் செயலாளர் கொத்தட்டை துரை - மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் என்.வைத்திலிங்கம் - ஊராட்சி செயலாளர் என்.மகாலிங்கம் - அதிமுக இளைஞர் (ம) இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்.வி.வேல்முருகன் சி.என்.பாளையம் கிளைச் செயலாளர் சி.தனசேகரன், கொஞ்சிகுப்பம் கிளைச் செயலாளர் ஜி.கலியபெருமாள், மேலவை பிரதிநிதி புதுகுப்பம் டி.முருகன், சொக்கநாதன்பேட்டை கிளைச் செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், காமாட்சிபேட்டை கிளைச் செயலாளர் சாதிக்பாஷா, சொக்கநாதன்பேட்டை தெரு கிளைச் செயலாளர் எம்.காசி, மேலவை பிரதிநிதிகள் சி.என்.பாளையம் சி.அசோகன், பி.துரை, புத்திரன்குப்பம் ஆர்.சுப்பரமணியன், பாசறை தலைவர் சி.என்.பாளையம் ஆர்.வி.மணிகண்டன், மேலவை பிரதிநிதிகள் கச்சிராயர்குப்பம் ராமு, சி.என்.பாளையம் கலியமூர்த்தி, கிளைச் செயலாளர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்ட உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி கணேசன், எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் லட்சுமணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், துரை.கி. சரவணன் ஆகியோர் உடனிருந்தனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Members joined DMK in Cuddalore