சசிகலா விடுதலை.. தீவிரம் காட்டும் அதிமுக.. இன்று வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிமுகவினர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்தும் சசிகலா வருகை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. வருகிற 27ம்தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளார். 

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா விடுதலை, சட்டமன்ற தேர்தல் கூட்டணி, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk district secretary meeting today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->