ஸ்டாலின் இப்படி பண்ணுவாருனு கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை...!! நடிகை கஸ்த்தூரி கூறிய அதிர்ச்சி தகவல்...!! - Seithipunal
Seithipunal


எப்போது பார்த்தாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி.இந்த வகையில் தற்போது ஸ்டாலின் கூறிய ஒரு கருத்தை விமர்சித்து பதிவிட்டு மீண்டும் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் , ‘இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்றும், இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம் என்று அதில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது என்றும், அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்,இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல” – மு.க.ஸ்டாலின் அட ஆமாம், கோவா குஜராத் கர்நாடகம் ஒடிஷா வடகிழக்கு காஷ்மீர், வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்கள், ஏன், ஆந்திராவும் இந்தியாதான்! என்பதை திரு மு.க.ஸ்டாலின் தானாகவே மனமுவந்து சுட்டிக்காட்டுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை என்று கிண்டலுடன் பதிவு செய்துள்ளார்.

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actres kasthuri told about mk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->