தடுப்பூசி மட்டுமே உயிரை பாதுகாக்கும் - கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நடிகர் விவேக்..!
Actor Vivek Pressmeet After Inject Corona Vaccine at Chennai Omanthur Hospital 15 April 2021
ஓமந்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடிகர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தடுப்பூசி மட்டுமே உயிரை பாதுகாக்கும் பாதுகாப்பு. கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டால், கொரோனா வராதா? என்பது கிடையாது. நாம் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா பாதித்தாலும் உயிரிழப்பு இருக்காது.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 2 வார காலத்திற்கு பின்னர், கொரோனா தடுப்பூசி செயல்பட தொடங்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மருத்துவர்கள் மருத்துவத்தை தொழிலாக செய்யாமல், சேவையாக செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரும் சேவையாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actor Vivek Pressmeet After Inject Corona Vaccine at Chennai Omanthur Hospital 15 April 2021