#Breaking: ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு.. ரஜினி ரசிகர் மன்றமாக நலப்பணி..! நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு.!!
Actor Rajinikanth Statement 12 July 2021
ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து, ரஜினி ரசிகர் மன்றம் இனி செயல்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கையில், அரசியல் நிலவரம் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளின் எண்ணங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர் உரிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறேன் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் சுமார் 1 மணிநேரம் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? கேள்வி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.
அதை விளக்க வேண்டி என்னுடையது கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பதவிகளையும், சார்பு அணிகளையும் உருவாக்கினேன்.
காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை-துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் குழு உறுப்பினர்கள் மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ் மக்கள்!! வாழ்க தமிழ்நாடு!! ஜெய் ஹிந்த்!!! " என்று தெரிவித்துள்ளார்
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actor Rajinikanth Statement 12 July 2021