#BigBreaking: வந்துட்டேன் னு சொல்லு, நிர்வாகிகள்ட்ட பேசிட்டு வந்துடுவேன் னு சொல்லு.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.!
Actor Rajinikanth Pressmeet at Poes Garden 12 July 2021
அரசியலுக்கு வருவதா? வேண்டாமா? என்பதை மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கேட்டறிந்து அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதாக பல வருடமாக அறிவித்து வந்த நிலையில், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அண்ணாத்த படப்பிடிப்பில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தற்போது, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள போய்ஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நான் அரசியலுக்கு வரவப்போதில்லை என்று சொல்லியதற்கு பின்னர் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. அண்ணாத்த படப்பிடிப்பு, அமெரிக்கா பயணம் என்று இருந்து தற்போது சிகிச்சை பெற்று சென்னை வந்துள்ளேன். தேர்தல் சமயத்திலும் கொரோனா மற்றும் உடல்நிலை காரணமாக நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை.
இதுபோன்ற பல காரணத்தால் மக்கள் மன்ற நிர்வாகிகளை இத்தனை நாட்களாக சந்திக்க முடியவில்லை. மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்த பின்னர், எனது மீதியுள்ள காலத்தில் அரசியல் பயணம் செய்வது தொடர்பாக அறிவிப்பேன்.
ரஜினி மக்கள் மன்றத்தை தொடர்ந்து செயப்படுத்தலாமா? அல்லது அதனை கைவிட்டு இயக்கமாக செயல்படலாமா? அதன் பணி என்ன? என்பது தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகளின் எதிர்பார்ப்பையும் கேட்டறிந்து எனது அரசியல் முடிவை அறிவிப்பேன் " என்று தெரிவித்தார். ஏற்கனவே இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actor Rajinikanth Pressmeet at Poes Garden 12 July 2021