சகோதரியின் கள்ளகாதலை தட்டி கேட்டவருக்கு நடந்த கொடூர சம்பவம்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் விவேகானந்தன் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். விவேகானந்தனின் மனைவி மோகனப் பிரியாவிற்கு, ஜெயந்தி என்ற சகோதரி உள்ளார். ஜெயந்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ராம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அரிந்த அறிந்த அவரது சகோதரி மோகனப் பிரியா, ஜெயந்தியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து, லோகேஷ் ராமுடன் பேசுவதை ஜெயந்தி நிறுத்திகொண்டார். தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ் ராம், ஆதம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் எரிக்கரையிலுள்ள பழக்கடைக்கு வந்து மோகனப்பிரியா மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அதன்பின்னர் அப்பகுதி மக்கள் லோகேஷ் ராமை பிடித்து துவைத்தெடுத்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மோகனா பிரியாவிடம் புகார் பெற்று கொண்ட ஆதம்பாக்கம் போலீசார். புகாரின் அடிப்படையில் லோகேஷ் ராமின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

acid throw in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->