நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய இரு சக்கர வாகனம்... தந்தையும் 2வயது மகனும் பலி..!
Accidnet Near Krishnagiri
நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தையும் இரண்டு வயது மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி இவருக்கு திருமணமாகி ரோகிணி என்ற மனைவியும் மிதுன் (2) என்ற மகனும் உள்ளனர். பெரியசாமி தனது குடும்பத்தாருடன் காவேரிப்பட்டணத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பெரியசாமி மற்றும் அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த ரோகினியின் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பெரியசாமி மற்றும் எத்துணை உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் தந்தையும் இரண்டு வயது மகனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Accidnet Near Krishnagiri