விழுப்புரம்: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்.. உடல் நசுங்கி வாலிபர் பலி..! - Seithipunal
Seithipunal


மரத்தில் கார் மோதி விபத்தில் வாலிபர் பலி ஆன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி நடராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை நடராஜன் தனது காரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது வானூர் அரசு பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near Vizhuppuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->