திருநெல்வேலி: கார் - பைக் மோதல் பரிதாபமாய் பலியான மருத்துவ கல்லூரி மாணவிகள்..!
Accident Near Thirunelveli
சென்றுகொண்டிருந்தபோது டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாகர்கோவில் அதில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் இவர்களுடன் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லை மதுரை நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காரின் டயர் ஒன்று வெடித்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தடுப்பை உடைத்துக் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இருசக்கர வாகனத்தில் நினைத்த மாணவிகள் காயத்ரி, பிரிட்டோ ஏஞ்சல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சண்முகசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
English Summary
Accident Near Thirunelveli