சரக்கு லாரி மோதி இளைஞர் பலியான சோகம்..!
Accident Near ramanadhapuram
சரக்கு லாரி மோதி இளைஞர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 23). பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த நுகர்பொருள் வாணிபகழக லாரி ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைபற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Accident Near ramanadhapuram