திடீரென கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம்.. 8 பேர் படுகாயம்..!
Accident Near Nilagires
80 அடி ஆழத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சியை சேர்ந்த சுகுமாரன் தனது குடும்பத்தினருடன் செவ்ரோவா டவேரா வாகனத்தின் மூலம் குடும்பத்தினர் ஊட்டிக்கு சுற்றுலா பயணம் சென்றுவிட்டனர். ஊட்டியில் இருந்து மேட்டுபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வண்டியின் பிரேக் பழுதானதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை தாண்டி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வண்டியில் பயணித்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.