பிறந்த நாள் விபத்து.. சகோதரியுடன் பலியான இளம்பெண்.. ஈரோடு அருகே நிகழ்ந்த சோகம்..!
Accident Near Erode
இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு எலவமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு நிஷா , ஷாலினி என இரு மகள்கள் உள்ளனர். நிஷாவின் பிறந்த நாளை கொண்டாட அவர் குமாரபாளையத்திற்கு சென்றுள்ளார்.
பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சகோதரிகள் இருவரும் அவரது உறவினரான சுபாஷ் என்பவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள வளைவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் சகோதரிகள் இருவரும் சம்பவ இடத்திளேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த சுபாஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.