ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கவிழ்ந்த முட்டை லாரி.. விபத்தில் பலியான ஓட்டுநர்..! - Seithipunal
Seithipunal


முட்டை ஏற்றி சென்ற லாரி சாலையின் தடுப்பு சுவரில் மொழி விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் குலத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர்  வியாழக்கிழமை நாமக்கலில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை திண்டிவனம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது தூக்கக்கலக்கத்தில் சாலையோரம் இருந்த தடுப்பு கட்டைகள் லாரி மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near Dindivanam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->