அப்பளம் போல நொருங்கிய கார்..! மூவர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் ராமு (68). இவரது மனைவி (58). இவர்கள் கார் மூலம் சென்னையில் உள்ள தங்கள் மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் பச்சையம் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது.
சம்பவ இடத்திலேயே லலிதா மற்றும் கார் டிரைவர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->