அரியலூர் செந்துறை அருகே மாணவருக்கு ஏற்பட்ட சோகம்.! ஆசிரியர்கள் செய்த காரியம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அருகே உள்ள விழுப்பணங்குறிச்சியில் தனியார் உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்த தனியார் பள்ளியில் நல்லநாயகபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (வயது 10) என்பவர் 5ம் வகுப்பு படித்து வருகின்றார். 

சந்தோஷ் நேற்று வழக்கம் போல தனது பள்ளிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் இடைவேளையில் மாணவர்களுடன் சேர்ந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கே அவனது மீது கழிவறை சுவறானது இடிந்து விழுந்துள்ளது. இதனால் சந்தோஷ் அலறி கத்தினான்.

bathroom seithipunal

சத்தம் கேட்டு ஆசிரியர்கள் விரைந்து ஓடி வந்து, இடிபாடுகளில் சிக்கி திணறிய சந்தோஷை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு ரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக சந்தோஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலை, கால் மற்றும் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in sendurai school


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->