சேலம்-ஆத்தூர் சாலையில் தாறுமாறாக வந்த ஆம்னி கார்.! தம்பதிக்கு ஏற்பட்ட சோகம்.!
accident in salem
சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள புதிராகவுண்டன் பாளையம் அருகே எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் இருசக்கவாகனத்தில் பயணித்துள்ளனர்.
அப்போது, சேலம்- ஆத்தூர் செல்வதற்காக ஆம்னி கார் ஒன்று எதிரில் வந்துள்ளது. இந்நிலையில், தாறுமாறாக வந்த ஆம்னி கார் இருசக்கரத்தில் வந்த தம்பதியின் மீது மோதவே, இருசக்கரவாகனத்தை ஓட்டி வந்த அந்த தம்பதிகள் தூக்கியெறியப்பட்டனர்.
இதில், அந்த தம்பதிகள் படுகாயமடைந்தனர். மேலும், வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கு ஒருபக்க தலையில் பலத்த அடி. இருப்பினும், அவரது மனைவி சற்று குறைவான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இதில் விபத்தை ஏற்படுத்திய ஆம்னி காரினை பொதுமக்கள் மறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.