புதுவை: இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பள்ளி பேருந்து.. பரிதாபமாய் பலியான இளைஞர்..!
Accident In Puthuvai
இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (32). இவர் தனதும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பள்ளி பஸ் எதிர்பாராதவிதமாக அவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அவர் தூக்கிவீசப்பட்டு பலத்தகாயமடைந்தார். அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.