பெரம்பலூர் அருகே பெரும் விபத்து.! தடுப்பு சுவரில் மோதிய லாரி.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம், ஆக்ராவில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டையுடன் லாரி ஒன்று திருச்சிக்கு புறப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு நேரத்தில் அந்த லாரி ஆத்தூர்-திருச்சி சாலையில் உள்ள பெரம்பலூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையின் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தைமுந்த வேகமாக லாரி இயக்கியுள்ளார்.

அப்போது பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது பயங்கரமாக மோதி பெரும் விபத்துக்குள்ளானது. வேகமாக மோதியதில் தடுப்பு சுவர் பலமாக சேதமடைந்துள்ளது. லாரியின் சக்கரங்கள் கழன்று லாரியின் அடிப்பக்கம் சிக்கியுள்ளது. ஆனால், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 

இந்நிலையில், உருளைக்கிழங்கு மூட்டைகள் சாலையில் விழுந்து சிதறி உள்ளது. இரவு நேரம் என்பதால் வாகன நடமாட்டம் அதிகமில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை உருளைக்கிழங்கு மூட்டைகளை வேறொரு லாரியை கொண்டு வந்து அதில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in perambalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->